districts

img

திட்டக்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திட்டக்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ராஜேதிரன், விவசாய சங்க தலைவர் ஆர்.மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.