விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணியை டிச.7 அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, ஏ.bஜ.மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் இரா.முத்து மீனாட்சி உட்பட பலர் உள்ளனர்.