districts

ஜெய்ப்பூரில் இருந்து பட்டங்கள், மாஞ்சா நூல்களை ஆன்லைனில் வாங்கும் நபர்கள்

சென்னை, நவ. 20- சென்னையில் குழந்தை உட்பட 2 பேரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததை அடுத்து காவல்துறையினர் தொடர் சோத னையில் ஈடுபட்டுள்ளனர்.  மாஞ்சா நூல் விற்பனை குறித்து புதிய  தகவல்கள் வெளியாகி வருகின்றன. அண்மை காலங்களில் குறைந்து இருந்த மாஞ்சா பட்டம் கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளன. கடந்த 17ஆம் தேதி மாஞ்சா  பட்டத்தின் நூல் அறுத்ததில் இரண்டரை வயது குழந்தை உட்பட இருவரின் கழுத்து அறுப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்ய ப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் தமிழ்நாட்டில் பட்டங்கள் மற்றும் மாஞ்சா  நூல் தடை செய்யப்பட்டு இருப்பதால், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் குழு மூலம் ஜெய்பூரில் இருந்து பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் வாங்கி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வரு வது தெரிய வந்தது. மேலும், குருகோகுல் கே.கே.நகரில் உள்ள தனது வீட்டிலேயே மாஞ்சா நூல் விற்பனை செய்து வருவதும் இவர் பட்டம் தொடர்பான போட்டியை நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் வாட்ஸ் ஆப் குழுவில் பட்டங்கள், மாஞ்சா நூல் கேட்டால் அவர்களுக்கு சப்ளை செய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களின் குடோன் மற்றும் வீடுகளில் தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது 500க்கும் மேற்பட்ட காற்றாடிகள், மாஞ்சா நூல் தயா ரிக்க பயன்படுத்தப்படும் மெஷின்கள் பறி முதல் செய்யப்பட்டன. இன்ஸ்டாகிராம் மூலம் விற்பனை செய்யும் எப்.பி. கைட்ஸ் என்ற நபரை கைது செய்யும் பணிகளில் காவல்துறையினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். மாஞ்சா நூல் மற்றும் பட்டம் விடுபவர்களை தொடர்ச்சியாக கண்காணிக்க தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளதாவும், தடை செய்யப்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.