districts

img

பெத்திக்குப்பத்தில் நச்சுக்குப்பைகளால் மக்கள் அவதி

திருவள்ளூர், நவ 15- கும்மிடிப்பூண்டியை ஒட்டி யுள்ள பெத்திக்குப்பம் ஊராட்சி யில் குவியும் நச்சு குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசு  ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை ஒட்டியுள்ள பெத்திக்குப்பம் ஊராட்சியில்  9 வார்டுகளில் சுமார் 20 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஆறு திருமண மண்டபங்கள்,  வணிக வளாகம்,  சாலையோர கடை கள்,  உணவகங்கள் என பல இயங்குகிறது. இது மட்டும் இன்றி தனியார் பள்ளிகள், இரண்டு அரசு பள்ளிகளும் உள்ளன.  ஊராட்சியின் அருகில் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு வாகன பயிற்சியகம் (ஐஆர்டி) உட்பட்ட பல முக்கிய அலு வலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் நாள் ஒன்றுக்கு 4  டன் முதல்,  5 டன் வரை குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டுகிறது. இவற்றை முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுவதில்லை.  இந்த குப்பைகளை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஏரி, குளம், கால்வாய் என நீர்நிலை களில் குப்பைகளை கொட்டும் அவலம் உள்ளது. இது மட்டும் இன்றி கும்மிப் பூண்டி சிப்காட்டில் உள்ள ஒட்டு மொத்த நச்சு குப்பைகளையும்  இந்த ஊராட்சியில்தான் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும் எந்த அனுமதியும் இல்லாமல் குப்பை கிடங்குகள் செயல்படுகின்றன. கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி நிர்வாகமும், பஞ்சாயத்து நிர்வாகமும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. மாவட்ட ஆட்சியர்,  அமைச்சர்கள் வருகை தரும் சமயத்தில் மட்டும் உடனடியாக குப்பைகளை சேகரித்து,  அங்கேயே குப்பைகளை தீயிட்டு  கொளுத்துகின்றனர்.  இதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு பாதிப்பை பற்றி யெல்லாம் எந்த கவலையும் நிர்வாகத்திற்கு இல்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பெயரளவில் கூட இங்கு செயல்படுத்தவில்லை என்கின்ற னர்.

கிராம சபை கூட்டத்தில் கூட  இதுகுறித்து பேசுவதில்லை. இதனால் இந்த பகுதி குப்பை கழிவு கள் நிறைந்த பகுதியாக மாறி உள்ளது. பருவநிலை மாற்றம் ஏற்படும் போது, குப்பை கழிவு களில் இருந்து துர்நாற்றம் வீசுவ தோடு, தொற்று நோய்கள் ஏற்படுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து பெத்திக்குப்பம் ஊராட்சியின் வார்டு உறுப்பின ரும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளருமான ப.லோகநாதன் குறிப்பிடுகையில், நிலத்தடிநீர் பாதிக்கும் வகையில் குப்பை கள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மூலம் குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும்,  9 வார்டுகளிலும் குப்பை தொட்டிகள் வைத்து பராமரிக்க வேண்டும், கூடுதலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்து, குப்பை அள்ளும் வண்டியை கூடுதலாக வழங்க வேண்டும், தாமரை ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர்,  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதி காரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நிர்ண யிக்கப்பட்ட அளவைவிட சுற்றுச் சூழல் மாசு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வாழ தகுதியற்ற இடமாக கும்மிடிப்பூண்டி மாறியுள்ளது. இந்த  சூழலில், பெத்திக்குப்பம் ஊராட்சி மக்களின் வாழ்வாதா ரத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?