districts

குடியிருப்புகளுக்கு ‘சீல்’ வைக்க திருமலை நகர் மக்கள் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 2 - திருமலை நகர் குடியிருப்புகளுக்கு ‘சீல்’  வைக்க வந்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். மதுரவாயல் பகுதி, ராமாபுரம் ஒருங்கிணைந்த திருமலை நகரில் அரசு மற்றும் குடிசை மாற்று வாரி யம் ஒதுக்கி நிலத்தில் மக்கள் வசித்து வருகின்ற னர்.இருப்பினும், குடியிருப் புகளை அகற்ற சென்னை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது. இதனை எதிர்த்து ராமாபுரம் ஒருங்கிணைந்த திரு மலை நகர் குடியிருப்போர்  போராட்ட ஒருங்கிணைப் புக்குழு தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் வெள்ளியன்று (ஜூலை 1) அப்பகுதிக்கு ‘சீல்’ வைக்க காவல்துறையினருடன் மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.பாலசுப்ரமணியம், சிபிஎம் பகுதிச் செயலா ளர் வி.தாமஸ், மாமன்ற  உறுப்பினர்கள், நலச்சங்க நிர்வாகிகள் திரண்டு அதி காரிகளை தடுத்து நிறுத்தி னர். அதன்பிறகு மாநகராட்சி  உயர்அதிகாரிகள் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடைகள், வீடுக ளுக்கு சீல் வைக்க அனு மதிக்க முடியாது. வழக்கு  முடியும் வரை எவ்வித நடவடிக்கையும் மாநகராட்சி  நிர்வாகம்  எடுக்க கூடாது என்று வலியுறுத்தினர்.