விடுதலைப்போருக்கு வித்திட்ட சிப்பாய் கலகம் எனும் சுதந்திர போராட்டம் தோன்றிய வேலூ ரின் வேராய் இருந்த ராணிப் பேட்டை மாவட்டத்தில் வரலாற்று புகழ்மிக்க ஆற்காடு தாலுகாவில் இருந்து தனியாக உதயமானதே கலவை தாலுகா.
நவீன கிராமமான கலவை, கி.பி 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாக இருந்துள்ளது. இது வடக்கில் ஆற்காடு, தெற்கில் திரு வண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி, கிழக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யார் ஆகிய தாலுகாக் களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
கலவை தாலுகாவில் உள்ள பல அரசுப் பள்ளிகளில், பல பாடப்பிரிவு களுக்கு ஆசிரியர்கள் இல்லை. அடிப்படை வசதியான கழிப்பிட வசதி கள் கூட இல்லை. பள்ளியிலுள்ள ஒரு சில கழிப்பறைகளை கூட சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் இல்லாத அவல நிலை இன்றும் தொடர்கிறது.
மாம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் பள்ளிக்கு கிளம்பும் முன்பு வீட்டில் சிறுநீர் கழித்து விட்டு சென்றால், பிறகு வீட்டுக்கு வந்து தான் இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய மோசமான நிலையில் உள்ளனர். இது இவர்களின் உடல் நலத்திற்கே கேடு விளைவிக்கும். இதனால் பெற்றோர்கள் மனம் குமுறு கின்றனர். இது தொடர்பான புகார் மீது ராணிப்பேட்டை மாவட்ட நிர்வா கம் எந்த அக்கறையும் காட்டாதது மிகுந்த வேதனையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துவதாக பெற்றோர் தெரி வித்தனர்.
மருத்துவமனைகள்
தாலுகாவில் 50 பஞ்சாயத்துக்கள் இருந்தாலும் கலவை மாம்பாக்கம், வளை யாத்தூரில் மட்டுமே ஆரம்ப சுகா தார நிலையங்கள் உள்ளன. கலவை யிலுள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையத்தை 100 படுக்கை வசதிகள் கொண்ட தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி நவீன மயமாக்க வேண்டும் என்பது கிராமப்புற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இங்கு பிரதான தொழில் விவசாயம். பருவ மழையை நம்பியே விவசாயிகள் உள்ளனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விளைவிக்கும் நெல்லுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த கிச்சிடி சம்பா அரிசி அதிக அளவில் விளையும் தாலுகா கலவையாகும்.
"உழுதவன் கணக்கு பார்த்தால் உழைப்பும் மிஞ்சாது" என்ற பழ மொழிக்கு ஏற்ப விளைவித்தவனுக்கு மிஞ்சுவதெல்லாம் பசியும், பட்டினியும் தான். எனவே, 5 கிராமங்களுக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை திறந்து இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை அமைக்க வேண்டியது அவசியமாகிறது.
கலவை தாலுகா மொத்த மாக 50 கிராம உள்வட்டம் பஞ்சாயத்துக்களை உள்ள டக்கியது. கலவை உள்வட்டம் 23 கிராம பஞ்சாயத்து, மாம்பாக்கம் உள்வட்டம் 27 கிராம பஞ்சாயத்துகள் கொண்டுள்ளது. இதில் 27 உள்வட்டம் கிராம பஞ்சாயத்து கொண்ட மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றியமாக மாற்ற வேண்டும்.
கலவையில் இருந்து மாம்பாக்கம் வழியாக சென்னைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையாக இருக்கும் வாழைப்பந்தல், மேலப்பழந்தை, சொரையூர் பகுதிகளில் இருந்து கலவை அல்லது மாவட்ட தலைநகரம் ராணிப்பேட்டை செல்வதற்கு கூட போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் தொடர்ந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கலவை தாலுகாவிற்குட்பட்ட முள்ளுவாடி பகுதியில் அமைந்துள்ள சிப்காட் பகுதி உடனடியாக தொழிற்பேட்டையாக மாற்றி கலவை பகுதி யில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க இதற்கு தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் வழி வகை செய்ய வேண்டும்.
பழங்குடி பட்டியல் இன மக்களின் வாழ்வு
கலவை வட்டத்தில் பரவலாக வசிக்கும் பழங்குடி மற்றும் பட்டியல் இன சமூக மக்கள் மண்ணின் பூர்வ குடி மக்கள் என்று சொன்னாலும் இன்றும் குடி யிருக்க வீடுகள் இல்லாத அவல நிலை தான் தொடர்கிறது. சாதி சான்று கொடுப்பதில் இன்னும் பின்னடைவு தொடர்கிறது. ஆனால் நாம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளையும் போராட்டங்களை முன்னெடுத்து வரு கிறோம். இருளர்கள் என்று குறிப்பிடப் பட்ட காரணத்திற்காகவே இன்னும் அவர்கள் வாழ்வில் ஒளி கிடைக்க வில்லையோ
புதிதாக தோன்றிய ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாலுகா பிரிப்பது என்பது பொதுவாக அரசு திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையவும், மக்க ளின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணவும் உதவும் என்று பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டாலும் மாவட்டத்தில் தாலுகாக்கள் பிரிக்கப்பட்டதால் பலன் அடைந்தவர்கள் ஒரு சில அதிகார வர்க்கத்தினர் மட்டுமே. புதிய மாவட்டத்தில் தாலுகா பிரிக்கப்பட்டது பயண தூரம் மட்டுமே
மிச்சம் என்பதை தவிர வேறு எந்த எச்ச மும் மக்களை சென்றடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கலவை தாலுகா குழு சார்பில் கலவை பேருந்து நிலை யம் அருகில் ஜூன். 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி பங்கேற்கும் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது. கோரிக்கைகளை வென்றெடுக்க இந்த மாநாட்டில் கலவை பகுதி மக்கள் பெருந்திரளாக அணிவகுக்கவேண்டும்.