districts

சென்னை முக்கிய செய்திகள்

சுற்றுலாவுக்கு தயாராகும்  சென்னை மக்கள்

சென்னை, ஏப். 4- கோடை வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட உள்ளன.  மேலும் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல சென்னை மக்கள் தயாராகி வருகிறார்கள். இதற்கான விமான பயண திட்டங்களை தேர்வு செய்து வருகின்றனர். அவர்கள், மக்களவைத் தேர்தல் முடிந்ததும் சுற்றுலா பயணம் செல்ல மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை தங்களுடைய பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர். இதனால் சென்னையில் இருந்து விமானம் மூலம் சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணமும் வழக்கத்தைவிட உயர்ந்துள்ளன.

ஆசிரியர் வீட்டில் திருட்டு
அம்பத்தூர், ஏப். 4- ஆவடி அடுத்த திருநின்றவூர், தாசர் புரம், 3ஆவது பிரதான சாலையை சேர்ந்தவர் கிருபைஜான் (58). இவரது மனைவி தீபம். இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மார்ச். 27அன்று அவர்கள் பள்ளிக்கு சென்றிருந்த போது, மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள், 35 ஆயிரம் ரூபாய்  ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருநின்றவூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சத்யாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 24 சவரன் நகைகள், 60 ஆயிரம் ரூபாய், 2 கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அம்பத்தூரில் பதட்டமான வாக்குச்சாவடிகள் 
தேர்தல் பார்வையாளர் ஆய்வு

அம்பத்தூர், ஏப். 4-  அம்பத்தூர் பகுதியில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் பாரத் ரெட்டி வியாழக்கிழமை (ஏப். 4) ஆய்வு செய்தார். திரும்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் உள்ள பதற்ற மான வாக்குச்சாவடி மையங்களில் தீவிர பாது காப்பு பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் வியாழக் கிழமை தேர்தல் பார்வை யாளர் பாரத் ரெட்டி அம்பத்தூர் அருகே பட்டரை வாக்கம் இ.பி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி, கொரட்டூர் மாதனாங்குப்பம் ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளி,  அம்பத்தூர், ஆசி ரியர் காலனி, நேரு நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வை யிட்டு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு பணி களை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் பிரதாப் ரெட்டி கொரட்டூரில் உள்ள பக்தவச்சலம் கல்லூரி யில் வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், கட்டுப்பாட்டு கருவி கள் உள்ளிட்டவைகளை பாதுகாக்கும் அறைகளை யும் பார்வையிட்டு பாது காப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதில் அம்பத்தூர் மண்டல அலுவலர் (பொ) கருணா கரன், மாநகராட்சி செயற் பொறியாளர்கள் சதீஷ் குமார், குமாரசாமி, அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கிரி, அம்பத்தூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ள இடங்களில்  சேதம் ஏற்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை

திருபெரும்புதூர், ஏப் 4-   இயற்கைஎரிவாயு குழாய்களில் தனிநபர்கள்  சாலைகளில் பள்ளம் தோண்டும் ஒப்பந்த்தார்ர்கள் ஏதேனும் சேதம் ஏற்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏஜி&பி பிரதம் நிறுவனம் எச்சரித்துள்ளது. வல்லக்கோட்டையில் இருந்து திருபெரும்புதூர் பிஎம் ஆட்டோ வரை இயற்கை எரிவாயு வழங்க இந்த நிறுவனம் குழாயை பதித்துள்ளது. இந்த நிலையில் சாலை விரிவாக்கப் பணி காரணமாக இந்தப் பகுதியில் பள்ளம் தோண்டிய போது இந்த குழாய் சேதம் அடைந்தது. நடப்பு சட்டத்தின்படி அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பணிகளால் ஏற்படும் சேதங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். எனவே பள்ளம் தோண்டும் பணிகளைத் தொடங்கும் முன்பு நகராட்சி அல்லது நகர எரிவாயு விநியோக நிறுவனத்திற்கு கட்டணமில்லா எண். +91 8056847333/1800-2022-999 மூலம் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் பலி

திருவள்ளூர், ஏப். 4- சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டிடத்தில் பெயிண்டிங் தொழில் செய்து வந்தனர். பெயிண்டிங் வேலை முடிந்ததை தொடர்ந்து 4 பேர் கொண்ட குழுவினர் சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்தனர். பொன்னேரி ரயில் நிலை யத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்வதற்காக  தொழி லாளர்கள் இருவர் பிளாட்பாரத்தில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தொழிலாளர்கள் இருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

உரிய அனுமதி பெறாமல் எழுதப்பட்ட  63,482 சுவர் விளம்பரங்கள் அழிப்பு

சென்னை, ஏப்.4- சென்னை மாவட்டத்துக்குட்பட்ட மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதில், கடந்த 18 நாள்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்ட 63,482 சுவா் விளம்பரங்கள், 14,237 சுவரொட்டிகள், 608 பதாகைகள், 2,050 இதர வகை விளம்பரங்கள் என மொத்தம் 80,377 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், தனியார் இடங்களில் இருந்த 5,643 சுவா் விளம்பரங்கள், 7,974 சுவரொட்டிகள், 612 பதாகைகள் மற்றும் 1,160 இதர வகை விளம்பரங்கள் என 15,389 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.62 கோடி மதிப்பிலான 8,589.16 கிராம் தங்கம், ரூ. 3.63 கோடி ரொக்கம், 12 ‘ஐ-போன்கள்’, 25 மடிக்கணினிகள் (ரூ.7.50 லட்சம்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரூ.14.16 லட்சம் மதிப்பிலான 131.6 கிலோ போதைப் பொருள்கள், ரூ.28.74 லட்சம் மதிப்பிலான 1,624.28 லிட்டா் மதுபானம் என மொத்தம் ரூ. 9.90 கோடி மதிப்பிலான பொருள்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா். இதுவரை, தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறல்கள் தொடா்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகார்களை 1950 மற்றும் 1800 425 7012 என்ற எண்களிலும், சி-விஜில் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் வேட்பாளா்களின் தோ்தல் செலவினப் பணிகளைப் பார்வையிட சிறப்பு செலவினப் பார்வையாளராக பி.ஆா்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 93452 98218 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்டாவை கிராமக்கணக்கில் பதிவேற்றம் செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி,ஏப்.4-  சூளகிரி வட்டம், துப்புக்கானப்பள்ளி கிராமம் ஒட்டிய பகுதியில் 1999 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட  20 வீட்டு மனை பட்டாக்களை கிராமக்கணக்கில் பதிவேற்றம் செய்யவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் காத்திருப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 5 முறை  சூளகிரி வட்டாட்சியர்,கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாழ்வதற்கு வேறு ஏதும் வழியில்லாததால் பட்டா கொடுக்கப்பட்ட இடத்தில் 9 குடும்பத்தினர் வீடு கட்டிவருகின்றனர். இந்த இடங்களில்  பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சி களால் அங்குள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. மேலும், இங்கு, குடியிருக்க முடியாது என்பதால் மின் இணைப்பு கேட்டு மீண்டும் மனு  கொடுத்தும் இணைப்பு அனுமதி கடிதம் வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரியாவும்,வட்ட அலுவலர்களும் அலைக்கழித்து வருகின்றனர்.  பட்டா கொடுத்து விட்டோம். கிராம கணக்கில் ஏற்றப் படாததால் மின் இணைப்புக்கு அனுமதி கடிதம் கொடுக்க முடியாது என தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர்  சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறை யிட்டபோது அவர்கள் ஏந்த பதிலும் அளிக்காமல் மறுப்பு  தெரிவித்தனர். அனுமதி கடிதம் பெறாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என வீடு கட்டியுள்ள பட்டாதாரர்கள் 

பாஜக பினாமி வீட்டில் தங்கம், ரொக்கம் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஏப்.4- ஓசூர் சோதனைச் சாவடியில் சீதாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் என்ற தொழிலதிபரின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.10 லட்சம்  ரொக்கம் கண்டுபிடிக்கப் பட்டு பறிமுதல் செய்யப் பட்டது. விசாரணையில் தனது ஆலைத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணத்தை பெங்களூருவில் உள்ள ஒரு தொழிலதிபரிடம் வாங்கி வந்ததாக கூறி யுள்ளார். இதை தொடந்து புதனன்று லோகேஷ் குமாரின் வீட்டில் வருமான  வரித்துறையினர் திடீர்  சோதனை மேற்கொண்ட னர். அவரது வீட்டில் சோதனை செய்ததில் கணக்கில் வராத உரிய ஆவணங்கள் இல்லாத 175 சவரன் நகை மற்றும் 1.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கிரஷர் உரிமையாளர் லோகேஷ் குமார் கர்நாடக பாஜக எம்எல்ஏ பசவராஜின் உதவியாளர் மஞ்சுநாத்தின்  மருமகன் என தெரிய வந்தது. இவர் அவரது பினாமி என கூறப்படுகிறது.