சென்னை, மே 19 -
தனியார்மயம், ஒப்பந்த முறைகளை கைவிட வேண்டும், 8 மணி வேலை நேரத்தை உறுதிப்படுத்துவதோடு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மே 20 ஆம் தேதி முதல் 30 ஆம்தேதி வரை 7 மையங்களில் இருந்து திருச்சி நோக்கி மக்கள் சந்திப்பு நடை பயணம் நடைபெறுகிறது.
இதனையொட்டி வியாழனன்று ( மே 18) பெருங்குடியில் சிறப்பு கருத்தரங்கம், தொழிற்சங்க முன்னோடிகள், சமூக செயற் பாட்டாளர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (பெருங்குடி), மின்ஊழியர் மத்திய அமைப்பு தென்சென்னை கிளை 2, டாஸ்மாக் ஊழியர் சங்கம் தென்சென்னை, டிரான்ஸ் பார்மர் அண்டு ஸ்விட்ச் கியர் எம்பிளாயீஸ் யூனியன், யுனைட், சோழிங்கநல்லூர் பகுதி அமைப்புசாரா சங்கங்கள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.
பெருங்குடி சங்கத்தின் பொதுச் செயலா ளர் மா.விஜயகுமார் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வை தலைவர் எஸ்.அப்பனு ஒருங்கிணைத்தார். சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் கே.திருச்செல் வன், துணைத் தலைவர் கே.விஜயன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில பொருளா ளர் ஏ.பழனி உள்ளிட்டோர் பேசினர்.
பெருங்குடி சங்க அலுவலக செயலா ளர் ஃபாமிதா நன்றி கூறினார். முன்னதாக சங்கத்தின் துணைப்பொதுச் செயலாளர் வீ.வேலவன் வரவேற்றார்.