சுதந்திர தின விழாவையொட்டி வேலூரில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ‘விடியலை நோக்கி இந்தியா’ என்ற தலைப்பில் மக்கள் ஒற்றுமை கலை விழா நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியர் அமுதா “விடுதலைப் போராட்டத்தில் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.