விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக செப்.7 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி சோழிங்கநல்லூர் பகுதி, செம்மஞ்சேரியில் பிரச்சாரத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் தொடங்கி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் பி.ஜெயவேல் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.