districts

புதிய வழித்தடத்தில் பேருந்துகள் மக்களின் கோரிக்கை நிறைவேறியது

ராணிப்பேட்டை, டிச. 21 –  ராணிப்பேட்டை மாவட்டம், வெளிதாங்கிபுரம் மற்றும் பாணாவரம் பகுதி மக்கள் காஞ்சிபுரம் பாணாவரம், காஞ்சிபுரம் வெளிதாங்கிபுரம் ஆகிய பகுதிகளுக்கு வழித்தட பேருந்துகளை இயக்க வேண்டுமென பல மாதங்களாக வலியுறுத்தி வந்தனர்.  இந்த கோரிக்கையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய வழித்தட பேருந்து இயக்க அனுமதி பெற்று தந்தார். இந்நிலையில் பனப்பாக்கம் பேருந்து நிலையத்தில் சனியன்று (டிச. 21) 2 புதிய வழித்தட பேருந்துகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, பொது மேலாளர் போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டலம் தட்சிணாமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் வடிவேலு, அனிதா குப்புசாமி, பேரூராட்சி தலைவர்கள் கவிதா சீனிவாசன், ரேணுகா தேவி, சரவணன், துணை மேலாளர் போக்குவரத்து கழகம் பொன்பாண்டி, பெருமாள், ரவி, ஸ்ரீனிவாசன்,  மஸ்தான், வெளிதாங்கிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.