திருவண்ணாமலை, அக். 31- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் எதிரே மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார விளக்கக் கூட்டம் நடைபெற்றது. செயலாளர் டி. வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம். சிவக் குமார், செயற்குழு உறுப் பினர்கள் ப. செல்வன், ந. சேகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சி . அப்பா சாமி, எம். மாரிமுத்து, வட்டார செயலாளர்கள் அப்துல் காதர், ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 100 நாள் வேலை செய்தவர்களுக்கு பாக்கி இல்லாமல் கூலி வழங்க வேண்டும், அனைவருக்கும் பயன்படாத புதிய தேசிய கல்வி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும், மக்களிடையே சாதி மத மோதல்களை கைவிட வேண்டும், விலை வாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பெரியார் சிலையில் இருந்து பேருந்து நிலையம் வரை நடை பெற்ற ஊர்வலத்தில் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.