districts

img

மருத்துவ காப்பீடு திட்டத்தை மறு ஆய்வு செய்க

சென்னை, பிப். 24 - மருத்துவ காப்பீடு திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது இது தொடர்பாக தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் த.உதயசந்திரனை சந்தித்து  சங்கத்தின் தலைவர்  நெ.இல.சீதரன், பொதுச்  செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ந.ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் பி.கே.இளமாறன் ஆகியோர் மனு அளித்தனர். இதனையொட்டி செய்தி யாளர்களிடம் பேசிய பி.கிருஷ்ணமூர்த்தி, “தேர்தல் வாக்குறுதி படி  புதிய ஓய்வூதிய திட்டத்தை  ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 70  வயதை கடந்த ஓய்வூதி யர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கையெ ழுத்து இயக்கம் நடத்தி னோம். இந்த இயக்கத்தில் 78  ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கையெழுத்திட் டுள்ளனர். அந்த மனுக்களை முதலமைச்சரிடம் கொடுக்க இயலவில்லை. எனவே, நிதித்துறை செய லாளரிடம் மனு அளித்து பேசியுள்ளோம்” என்றார்.