districts

img

நிலுவை தொகையை வழங்க கோரி ஓய்வூதியர் கோரிக்கை

ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் ஆகியோருக்கு மருத்துவ காப்பீடு குறையில்லாமல் வழங்க வேண்டும், அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய, மாநில ஓய்வூதியர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழனன்று (நவ .3) நடைபெற்றது. அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கோ.இளங்கோவன் தலைமையில்  மாவட்டச்செயலாளர் ஆர்.ஜெயராமன், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க செயலாளர் இராமச்சந்திரன், சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் லூர்துசாமி, அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் மணி மற்றும் கு.கன்னியப்பன் ஆகியோர்  பேசினர்.