சென்னை, மார்ச் 2 - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப். 19 அன்று நடை பெற்றது. அன்றையதினம் நாளிதழகளில் வாக்கு கோரி பாஜக, திமுக வேட்பாளர்கள் சிலர் விளம்பரம் கொடுத்துள்ள னர். இதனை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், உள்ளாட்சி தேர்தலுக்கு பொருந்தாது. மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பில், பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட எந்த தடையும் விதிக்கவில்லை. தொலை க்காட்சி, வானொலி, சமூக வலைதளங்களில் வெளியிடத் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து, வழக்கு தொடர்ந்த வருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.