districts

வட்டியின்றி சொத்துவரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை, டிச. 28 - உயர்த்தப்பட்ட சொத்து வரியை தனிவட்டி இல்லாமல் செலுத்துவதற்கான காலத்தை ஜன.15ந் தேதி வரை சென்னை மாநகராட்சி நீட்டித்து தீர்மானம் நிறை வேற்றி உள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் புதனன்று (டிச.28) மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திறந்த வெளி நிலங்கள் (ஓஎஸ்ஆர்) பயன்பாட்டிற்கான வழிகாட்டல், கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க தனி யார் நிலம் கையகப்படுத்துதல், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ‘நலமிகு சென்னை’, ‘நட்புமிகு சென்னை’ என்ற அடிப்படையில் தனியார் நிகழ்வுகளை நடத்திட கட்டணம் பெற்று அனுமதித்தல் என்பன உள்ளிட்ட 80 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சத்தியவாணி முத்துநகர் (வார்டு 1), எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை (வார்டு 9), கதிவேடு விநாயகபுரம் (வார்டு 30), மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெரு (வார்டு 31), நொளம்பூர் மாதா கோவில் (வார்டு 143), சிட்கோ (வார்டு 170), சத்தியவாணி முத்துதெரு (வார்டு 199) ஆகிய 7 இடங்களில் எரிவாயு தகன மேடை அமைக்க மன்றம் ஒப்புதல் வழங்கியது. சென்னையில் 1 லட்சத்து 77 ஆயிரம் தெரு விளக்கு மின் கம்பங்கள் மற்றும் 200 இயர் கோபுர மின் விளக்கு களை ஓராண்டிற்கு இயக்க, பராமரிக்க ஒப்பந்தம் அளித்தல், பெருங்குடி குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும்போது சுற்றுச்சூழல் பூங்கா, சி என் ஜி பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.