சென்னை, ஆக.1- சென்னை ஈசிஆர்- ல் உள்ளது மாயா ஜால் பொழுதுபோக்கு நிறுவனம். இந்நிறு வனம், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 2 ஏக்கர் அளவிலான இடத்தை வாகன நிறுத்தமாக பயன்படுத்தி வருகிறது. இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம். இவ்விடத்தை நீண்ட கால குத்தகைக்கு கேட்டு மாயாஜால் நிறுவனம் விண்ணப் பித்திருந்தது. வழக்கு விசாரணை நிலுவை யில் உள்ளது. இதனிடையே 2 ஏக்கர் நிலத்துக்கும் பட்டா கேட்டு காஞ்சிபுரம் வட்டாட்சியரிடம் மாயாஜால் நிறுவனம் விண்ணப்பம் கொடுத்திருந்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றுகூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. 2015ல் மாயாஜால் நிறுவனத்துக்கு 2 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவு எதிர்த்து காஞ்சிபுரம் வட்டாட்சி யர் மேல்முறையீடு தாக்கல் செய்தார். அதில், நீண்டகால குத்தகைக்கு விண்ணப் பித்திருந்த வழக்கு நிலுவையில் இருந்ததை மறைத்து 2 ஏக்கர் நிலத்துக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், உண்மை தகவல்களை மறைத்து மாயாஜால் நிறுவனம் பட்டா பெற்றுள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை வியாழனன்று விசாரித்த நீதிபதிகள் டி.ராஜா மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, வட்டாட்சியர் வாதத்தை ஏற்றுக்கொண்டு மாயாஜால் பொழுது போக்கு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டது.