districts

img

பொன்னேரியில் சிபிஎம் போராட்டம்

திருவள்ளூர், பிப்.8- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அத்துமீறல் மற்றும் மாநில உரிமை,  கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து வியாழனன்று (பிப் -8), பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மதிமுக மாவட்ட  செயலாளர் மு.பாபு,  விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.நீல மேகம், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட  நிர்வாகி அப்துல் கலாம், திராவிடர் கழக  நகர செயலாளர் சுதாகர், சிபிஐ ஒன்றிய  செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவர் பாலன் ஆகியோர் பேசினர். சிபிஎம் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.சந்தானம் இடைக்கமிட்டி செயலாளர்கள் எஸ்.இ. சேகர் (பொன்னேரி), இ.ராஜேந்திரன் (கும்மிடிப்பூண்டி), ஜி.வி.எல்லையன் (சோழவரம்) உட்பட பலர் கலந்து கொண்ட னர்.