ஆலந்தூர்,ஜூன் 12-
சென்னை விமான நிலை யத்திற்குள் பயணி களை ஏற்ற, இறக்க செல்லும் வாகனங்கள் முதல் 10 நிமி டத்துக்கு இலவசமாக அனு மதிக்கப்படும். அதன் பிறகு முதல் 30 நிமிடத்திற்கு ரூ.75, அதற்கு மேல் 30 நிமிடத்திற்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. வாகனங்களில் பெரும்பாலும் பாஸ்ட் டேக் மூலம் பணம் எடுக்கப்படு வதால் இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிக ளுக்கு உடனடியாக தெரிய வில்லை. இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறும் போது, செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்த பிறகே கூடுதல் கட்டணம் பற்றி எங்களுக்குத் தெரியும். திரும்பி சென்று அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் இல்லை. தகவல் தெரிவிக்காமல் கூடுதல் கட்டணம் வசூ லிக்கின்றனர் என்றார்.