districts

img

வி.கே.டி சாலை பணியை விரைந்து முடித்திடுக பண்ருட்டி வட்ட சிபிஎம் மாநாடு கோரிக்கை

கடலூர்,அக்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பண்ருட்டி வட்ட 13-வது மாநாடு தோழர்கள் என்.சங்கரய்யா, சீதாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் பண்ருட்டியில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கவுரி செங்கொ டியை ஏற்றி வைத்தார். ஆர்.லோக நாதன் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வினோத் குமார் வரவேற்றார். ஏ.பன்னீர் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்டச் செய லாளர் கோ.மாதவன்  மாநாட்டை துவக்கி வைத்தார்.  வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழு மலை வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், வி.உதயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு நிறை உரையாற்றினார். எஸ்.குமரகுருபரன் நன்றி கூறி னார்.  வட்டக்குழு தேர்வு இம் மாநாட்டில் 15 பேர் கொண்ட  வட்டக் குழுவின் செயலாளராக எஸ்.கே.ஏழுமலை தேர்வு செய்ய ப்பட்டார். தீர்மானங்கள் வி.கே.டி சாலையை விரைந்து முடித்திட வலியுறுத்தி வருகிற நவ.9 அன்று மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டி வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும், முந்திரி  விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காடாம்புலியூரில் ஜாம் தொழிற்சாலை அமைக்க வேண்டும், மலட்டாற்றில் அரசூரில் செக்டேம் அமைக்க வேண்டும். திருத்துறையூர், சின்ன பேட்டை சுடுகாட்டு பாதைக்கு வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.