புதுச்சேரி, பிப்.11- புதுச்சேரியில் பாண்டெக்ஸ் ஊழியர்க ளுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள பாண்டெக்ஸ் கூட்டுறவு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 48 மாதங்களாக வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். புதுச்சேரி அரசிடம் இருந்து பாண்டெக்ஸ் கைத்தறி நிறுவனத்திற்கு வரவேண்டிய பல கோடிக்கணக்கான தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு சங்கத்தின் தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். சிஐடியு புதுச்சேரி மாநில துணைத் தலைவர் கொளஞ்சியப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பிஎம்எஸ் தொழிற்சங்க நிர்வாகி ஆசைத்தம்பி, மற்றும் ராஜவேலு, சிவக்குமார், காளிமுத்து, கார்த்திகேயன் உட்பட திரளான ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.