districts

img

ஊராட்சிமன்றத் தலைவியின் கணவர் அடாவடித்தனம்

ராணிப்பேட்டை, மே 9 - திமிரி அருகே ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் செய்து வரும் அடாவடித்தனத்திற்கு பி.டில்லிபாபு கடும் கண்டனம் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியம், மழையூர் ஊராட்சி மன்ற தலைவி ராணியின் கணவர் ராம மூர்த்தி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு சர்வாதி காரத்தனத்துடன் நடந்துக்கொள்வதை கண்டித்து தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. சின்னதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மழையூர் ஊராட்சி, நம்பித்தாங்கல் கிராம பழங்குடி வகுப்பைச் சார்ந்த வேட்டைக்காரன் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சேட்டு. இவரது குடும்பத்தாருக்கு வாழ்வாதாரமாக இருப்பது விவசாய நிலம். இவற்றை அழிப்பதற்கு, மழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராணியின் கணவர் ராமமூர்த்தி தனது அடி ஆட்களை வைத்து மிரட்டி வருகிறார். ராமமூர்த்தி அவரது சகோதரருக்கு சொந்தமான நிலத்திற்கு அருகி லுள்ள அரசு நிலங்களில் 2 போர்வெல்கள் (ஆழ்துளை கிணறு) அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ராணி ஊராட்சி மன்றத் தலை வராக பதவியேற்றதும். அந்த 2 போர்வெல்களையும் அப்புறப்படுத்தி னார்கள். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், ஒன்றிய ஆணையருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில்,  அடாவடியாக போடப்பட்ட 2 போர்வெல்களை யும் அப்புறப்படுத்தக் கோரியும், ராணிப்பேட்டை மாவட்ட பழங்குடி வேட்டைக்காரன் இன மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்காமல் புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் இரா. சரவணன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் ஈ. கங்கா துரை, மாநிலப் பொருளாளர் ஜி. ஏழுமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என். காசிநாதன், ஏவி.சண்முகம் (அகில இந்திய ஆதிவாசிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை) ஆற்காடு செயலாளர் எஸ். செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் என். ரமேஷ், எல்.சி. மணி, எஸ். கிட்டு, சி.ராதாகிருஷ்ணன், பி. ரகுபதி, எம். குமார் உள்ளிட்டோர் உரையாற்றினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநிலத் தலைவர் பி. டில்லி பாபு பேசுகையில், “கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக அரசு மேற்கொண்டு வரும் பணிகளை நாங்கள் எதிர்க்கவில்லை. அதனை வரவேற்கிறோம். ஆனால், ஊராட்சிமன்ற தலைவருடைய கண வரின் அடாவடித்தனத்தைதான் கண்டிக்கிறோம்”என்றார். உள்ளாட்சி மன்றத் தேர்தலின் போது எங்கள் சங்கத்தின் தலைவர் சேட்டு, ராணிக்கு எதிராக செயல்பட்டார். என்பதற்காக விட வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வீ.ஜெயஸ்ரீ ஆகியோரிடம் மனு அளித்தனர்.   மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உடனே ஊழியர்களை அழைத்து 3 போர்வெல் தண்ணீர் தரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.