districts

img

பஞ்சமி நிலம் மீட்பு பயணம்

சட்டவிரோதமாக பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி தலித் நிலவுரிமை இயக்கம், புதிய கோடாங்கி ஒருங்கிணைப்பு  தலைவர் ப. சிவகாமி தலைமையில்  பஞ்சமி நிலம் மீட்பு பயணம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதனன்று (அக்.9) ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ராணிப்பேட்டை புதிய கோடாங்கி வாசகர் வட்டத் தலைவர் பேராசிரியர் ஆ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வரவேற்பு கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் சு. இன்பநாதன் முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் அ. கலைநேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எபிஎம். சீனிவாசன்,சமூக சமத்துவப்படை கட்சி மாநில பொதுச் செயலாளர் கோடாங்கி தங்க மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.