சென்னை,மார்ச்13- சென்னை அருகே பள்ளிக் கரணை அனை ஏரி சர்வே எண் 232ல் அமைந்துள்ளது. 50 ஏக்கர் பரப்பளவுடன் சுமார் 2 கி.மீ. சுற்றளவு கொண்டது. 20 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியை சுற்றி சுமார் 8 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. சென்னை மாநகராட்சி பள்ளிக்கரணை, மேடவாக்கம் (வடக்குப்பட்டு) ஊராட்சி, கோவிலம்பாக்கம் ஊராட்சி, சுண்ணாம்பு கொளத்தூர் ஊராட்சிகளின் எல்லைகளில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, பூங்கா, நடைபாதை வசதியோடு சீரமைக்க 2019ம் ஆண்டு பொதுப்பணித் துறை 11 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. அதன்படி, தடுப்புச்சுவர், தடுப்பு வேலி, நடைபாதை, ஏரிக்குள் பூங்கா அமைக்கும் பணிகள் செய்ய வேண்டும். ஏரியின், பெரும்பகுதி கரைகள் பலப்படுத்தி, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதி கரைகளை பலப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நீண்டநாட்களாக தடைபட்டு நிற்கிறது. கொரோனா பரவலால் அடுத்தடுத்து பிறப்பிக்கப் பட்ட ஊரடங்கு, தேர்தல்கள், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்க ளால் சீரமைப்பு பணிகள் தடைபட்டுள்ள தாக ஏரிக்கு அருகே வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். அனை ஏரியின் ஒரு பகுதியில் 3000 வீடுகளை கொண்ட புரவன் காரா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இங்கிருந்து நேரடியாக ஏரியில் கழிவு நீர் விடப்பட்டது. அதை குடியிருப்பு சங்கங்கள் புகார் செய்து தடுத்து நிறுத்தின. இருப்பினும், அனை ஏரிக்கும், சுண்ணாம்பு கொளத்தூர் ஏரிக்கும் இடையே வெற்று நிலம் உள்ளது. அந்த இடத்தில், புரவன்காரா குடி யிருப்பிலிருந்து இரவு நேரத்தில் கழிவுநீர் திறந்து விடப்படுவதாக குடியிருப்போர் கூறுகின்றனர். இதனால் ஏரிக்கும், குடி யிருக்கும் மக்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இரண்டு ஏரிக்கும் இடையே உள்ள காலி இடத்தில் பூங்கா அமைத்தால், கழிவுநீர் விடுவதையும், குப்பைகள் தேங்குவதையும் தடுக்க முடியும் என்று குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை தெரி விக்கின்றனர். அனை ஏரி, சுண்ணாம்பு கொளத்தூர் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு விவசாய நிலங்கள் வழியாக சென்று கொண்டிருந்தது. வேளாண் நிலங்கள், குடியிருப்புகளாக மாற்றப்பட்டன. இதனால் அனை ஏரி, சுண்ணாம்பு கொளத்தூர் ஏரியி லிருந்து வெளியேறும் தண்ணீர் குடி யிருப்பு பகுதிகளில் தேங்குகிறது. எனவே ஏரி உபரி நீர் செல்ல பாதை அமைக்க வேண்டும் என்பதும் அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. “அனை ஏரி சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும், பொதுப்பணித்துறை திட்டமிட்ட ஏரிக்குள் பூங்காக்களை அமைக்க வேண்டும். ஏரிகளுக்கு இடைப்பட்ட இடத்திலும் பூங்கா அமைக்க வேண்டும்.
வெளியேறும் உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல பாதை அமைக்க வேண்டும் என்று பிரபுநகர், ஸ்ரீஅம்பாள் நகர், நாராயணன் நகர், ஸ்ரீ கணபதி நகர், டில்லிபாபுநகர் குடியிருப்போர் பொது நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கோருகின்றனர். “சோழிங்கநல்லூர் தொகுதி முழுமையும் பாதாள சாக்கடை கட்ட மைப்பு இல்லை. புறநகர்ப் பகுதி அசுர வேகத்தில் வளர்ந்து வரு கின்றன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆங்காங்கே விடப்படுகிறது. இத னால் அந்த பகுதி முழுவதும் உள்ள நீர்நிலைகள் கடுமையாக மாசடைந்து வருகின்றன. இதனை தடுக்க, மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்” என்று சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் டி.ராமன் வலியுறுத்தி உள்ளார்.