districts

img

அடிப்படை வசதியில்லாத பல்லாவரம் வாரச்சந்தை

பல்லாவரம், ஜூன் 13 -  பல்லாவரம் ரயில்  நிலையம் அருகே வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தை மிகவும் பிரபலமானது. இரு  நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த சந்தையில் சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து கடை கள் அமைத்து வியாபாரம்  செய்கின்றனர். ஆயிரக் கணக்கான மக்கள் வந்து பொருட்கள் வாங்கிச் செல் கின்றனர். புதிய பொருட்கள் மட்டு மின்றி உபயோகப்படுத் தப்பட்ட தட்டுமுட்டு சாமான்கள், சைக்கிள்கள், பர்னிச்சர்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பழங்கால அரிய பொருட்கள்  ஆகியவையும் இங்கு  குறைந்த விலையில் விற்பனை செய்யப்படு கின்றன. மேலும், சென்னை புற நகர் பகுதிகளில் விவசாயி களால் விளைவிக்கப்படும் தேங்காய், மாங்காய், கடலை, பூ, காய்கறிகள் உள் ளிட்ட விவசாய பொருட்க ளும், நாய், முயல், கோழி, பறவைகள் போன்ற செல்லப் பிராணிகளும் இங்கு விற்பதால் மக்கள் குறைந்த விலைக்கு அதனை வாங்கிச் சென்று பயன்பெறுகின்றனர். இந்த சந்தைக்கு வாரம்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கான பொருட் கள் விற்பனை செய்யும் கடை கள் சுமார் 800க்கும் மேல் செயல்படுகின்றன. இந்நிலையில், ஆயிரக் கணக்கான மக்கள் கூடும் பல்லாவரம் சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குறிப்பாக குடிநீர், கழிப்பிட வசதி போன்றவை செய்து தரப்படாததால் நீண்ட தொலைவில் இருந்து பல்லாவரம் சந்தைக்கு வருகை தரும்  பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோர்கள் இயற்கை உபாதையை கழிக்க சிரமப்படும் நிலை உள்ளது.

இந்த சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படு கிறது. ஆனால் அவற்றை நிறுத்த இடவசதி இல்லாத தால் சாலையில் போக்கு வரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதுகுறித்து பல்லாவரம் கண்டோன்மெண்ட் வாரச் சந்தை சிறு கடை வியாபாரி கள் நலச்சங்கத் தலைவர் இஸ்மாயில், செயலாளர் ஜி.பூமிநாதன் ஆகியோர் கூறுகையில், வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பெரு விழாவைப்போல் பல்லா வரம் சந்தை காட்சிய ளிக்கும். இங்கு வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து  விற்பனையில் ஈடுபடுவதால் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கும். இதனால், இங்கு பொருட் கள் வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவ்வாறு வரும்  மக்களுக்கான அடிப்படை  வசதிகளை செய்துதர பல்லா வரம் கண்டோன்மென்ட் நிர்வாகம் முறையான  நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சந்தையால் பலகோடி ரூபாய் லாபம் ஈட்டும் இந்த நிர்வாகம் வியாபாரிகள், மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை,  ஆகவே கண்டோன்மண்ட் நிர்வாகம் நேரடியாக தலை யிட்டு  மக்களுக்கான அடிப் படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு வசதிகளை விரைந்து செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.