திருவள்ளூர், நவ.26- கிழக்கு கடற்கரை சாலையில் பழ வேற்காடு முதல் காட்டுப்பள்ளி வரை போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ள 12 கி.மீ. தூர சாலையை புதிதாக அமைக்க மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காடு லைட் அவுஸ் குப்பம் முதல், சென்னை – எண்ணூர் வரை கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது. சுமார் 26 கி.மீ. தூரம் உள்ள இச்சாலை யில் லைட் அவுஸ் குப்பம் முதல் காட்டுப்பள்ளி வரை 12 கி.மீ. தூர சாலை, பழவேற்காடு, லைட் அவுஸ் குப்பம், கோட்டைக்குப்பம், தாங்கல் பெரும்புலம், காட்டுப்பள்ளி ஆகிய 5 ஊராட்சி பகுதிகள் வழியாகச் செல்கிறது. இந்த 5 ஊராட்சிகளுக்கு உட்பட்ட அரங்கன் குப்பம், கரிமணல், ஆண்டி குப்பம், ஜமீலாபாத், எடையன் குப்பம், கோரைக்குப்பம், கருங்காலி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 25 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வரு கின்றனர். மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும், பழ வேற்காடு, பொன்னேரி, மீஞ்சூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் இந்த சாலை பிரதானமாக விளங்குகிறது. மேலும், காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு புதுநகர், வல்லூர், சென்னை–எண்ணூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் தனியார் துறை முகம், வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சமை யல் எரிவாயு நிரப்பும் மையம், தனி யார் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறு வனங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து வசதி இல்லாததால், மோட்டார் சைக்கிள்கள், ஷேர் ஆட்டோக்களில் மட்டும் மீனவ மக்கள், தொழிலாளர்கள், பழ வேற்காடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பழவேற்காடு – லைட் அவுஸ் குப்பம் முதல் காட்டுப்பள்ளி வரையிலான 12 கி.மீ., சாலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், அவை குண்டும், குழியுமாகி போக்கு வரத்துக்கு லாயக்கற்ற தாக மாறி விட்டன. இதனால், மீனவ மக்கள், தொழிலாளர்கள் பல்வேறு இன்ன லுக்கு ஆளாகி வருவதாக கூறு கின்றனர். எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.