சென்னை,டிச.1- ஜனநாயகத்தை, அரசியல் அமைப்பு சாசனத்தை குழிதோண்டி புதைக்கும் பாஜகவை மக்களை திரட்டி வீழ்த்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் ப.செல்வசிங் கூறினார். கட்சியின் வடசென்னை மாவட்ட 24வது மாநாட்டை ஞாயிறன்று (டிச.1) மணலியில் தொடங்கிவைத்து அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: நவீன தாராளமயக் கொள்கை, நவீன தொழில்நுட்பம் ஆகியவை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவ தில்லை. மாறாக வேலை இழப்பைதான் உருவாக்குகிறது. இதனால் வசதி படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கு மான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால்தான் உழைப்புக்கும் மூலதனத்திற்குமான போராட்டம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது என்றார். கடந்த தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவதற்கு மேற்கொண்ட வியூகத்தில் ஓரளவு வெற்றி பெற்றி ருக்கிறோம். ஆனால் இது போதுமா என்றால் போதாது. முற்றிலுமாக ஆட்சியை விட்டு அகற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது. நிர்வாகம் நினைத்தால் அவர்களை எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றும் நிலை உள்ளது. மக்களை கசக்கிப்பிழியும் ஜிஎஸ்டி ஒரு மாதத்திற்கு ஒரு கோடி லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசின் இலக்கு. ஆனால் மோடி அரசு அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதித்ததன் மூலம் ஒரு மாதத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அர சுக்கு வருவாய் வருகிறது. இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள், ஆலைத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், வணி கர்கள் என அனைத்து பகுதியினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி உழைப்பாளி மக்களை சுரண்டும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆன் லைன் வர்த்தகத்தை ஊக்குவித்து சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. கிராமப்புற மக்களின் 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலுமாக அழித் தொழிக்க பாஜக அரசு முயல்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி தொடர்ந்தால் ஏற்கெனவே போராடி பெற்றிருக்கக் கூடிய தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும், சலுகை களும் பறிக்கப்படும். ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும். எனவே அரசியலமைப்பு சாச னத்தை, ஜனநாயகத்தை, நீதித் துறையை பாதுகாக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது. மக்களுக்கு அரசியல் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வர்க்கப் போராட் டத்தை முன்னெடுப்போம், மக்களை பிளவுபடுத்தும் மதவெறி பாஜகவை வீழ்த்துவோம். இவ்வாறு ப.செல்வசிங் பேசினார்.