districts

img

‘நம் பள்ளி நம் பெருமை’: விழிப்புணர்வு கலை பயணம்

விழுப்புரம், மார்ச் 11- பள்ளி மேலாண்மைக் குழு குறித்த விழிப்புணர்வு கலைப் பயணத்தை விழுப்புரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணபிரியா  தொடக்கிவைத்தார். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ‘நம் பள்ளி நம் பெருமை’ என்ற தலைப்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழிப்புணர்வு கலை பயணத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணபிரியா துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர்கள், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும். மாணவர்களின் கற்றல் நிலைகளை மேம்படுத்துவதற்கு பெற்றோர்கள் பள்ளியில் நடைபெறும் மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்த மாவட்டத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு 16 கலைக்குழுக்கள் அனைத்து ஒன்றியங்களிலும் பயணிக்க உள்ளனர். இதில், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை உதவித் திட்ட அலுவலர் க.தனவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.ஜெயச்சந்திரன், மாவட்ட கருத்தாளர் வி.பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், கடலூர் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு குறித்த விழிப்புணர்வு கலைப் பயணத்தை கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பூபதி துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எஸ்.பாலகுருநாதன், மாவட்டச் செயலாளர் ஆர்.தாமோதரன், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.குணாளன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.