districts

img

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் போராட வேண்டும்

புதுச்சேரி, மே 9- 90 விழுக்காடு அமைப்பு சாரா தொழிலாளர்கக் காக அமைப்புசார்ந்த தொழி லளர்கள் போராட முன்வர வேண்டும் என க.சுவாமிநாதன் வேண்டு கோள் விடுத்தார். புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஸ்தாபக தலைவர்களுள் ஒருவரான மறைந்த தோழர் சி.எச்.பாலமோகனனின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் முல்லை நகரில் சம்மேளன தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் புதனன்று (மே 8) நடை பெற்றது. காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தென் மண்டல முன்னாள் பொதுச்செய லாளர் க.சுவாமிநாதன் கலந்துகொண்டு பேசுகை யில், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்பு  இந்திய உழைப்பாளர்களின் உரிமைகள் மீது ஆட்சி யாளர்கள் தாக்குதல் நடத்தி னார்கள். அதற்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் உழைப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வரு கிறார்கள். 1990ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை உழைப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை இந்திய  தொழிலாளி வர்க்கம் எதிர்கொண்டு வரு வதற்கு காரணம், நம்மை வழிநடத்தி சென்ற தன்னலமற்ற தலைவர்களின் தியா கம் தான். அந்த வரிசை யில் தான் தோழர் பால மோகனனின் நினைவை போற்றி வருகிறோம். விவசாய பொருட்க ளுக்கான ஆதார விலை நிர்ணயம் செய்யக் கோரி தில்லியில் வீரம் செறிந்த போராட்டத்தை  விவசாயிகள் நடத்தி னார்கள். ஆளும் ஆட்சி யாளர்கள் எண்ணற்ற தாக்கு தலை விவசாயிகள் மீது நடத்தியும், அத்தகைய போராட்டம் ஒரு வருடம் நடைபெற்றது. அவர்க ளின் நியாயமான போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து அமைப்புசார்ந்த தொழி லாளர்களும் போராடி இருந்தால், போராட்டம் துவங்கிய உடனே கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டிருக்கும். எனவேதான் விவசாயி களுக்காக, 90 விழுக்காடு உள்ள அமைப்புசாரா தொழி லாளர்களுக்காக அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் போராட முன்வர வேண்டும். 2019ஆம் ஆண்டு அதானிக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெரும் ரூ.120ஆக இருந்தது. இன்றைக்கு அதன் மதிப்பு ரூ.4000 ஆயிர மாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு அதானியின் பங்கின் விலை ரூ.1200 ஆக சரிந்தது. உடனே அதன் மதிப்பு ரூ.3000 ஆக உயர்ந்தது. புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து போரா டும் அமைப்பு சார்ந்த தொழி லாளர்கள் கோரிக்கைக்கும், அதானிக்கும் தொடர்பு உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். இடதுசாரிகள் ஆதர வோடு இருந்த ஆட்சியாளர் கள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் போது ஏன் வலதுசாரி ஆட்சி யாளர்களால் நிறைவேற்ற முடியவில்லை என்று சிந்தித்து பார்க்க வேண்டும். படிப்படியாக அமைப்பு சார்ந்த தொழி லாளர்களின் எண்ணிக்கையை ஆட்சி யாளர்கள் குறைத்து கொண்டே வருகிறார்கள். இந்திய நிதித்துறையை சூதாட்டக் களமாக மாற்றி யுள்ளனர். வெறும் பொரு ளாதார கொள்கைக்களுக் காக மட்டுமே நமது போராட்டம் என்பதை மாற்றி அனைத்து தரப்பினருக்கு மாக நாம் போராடுவதன் மூலம்தான் தோழர். பால மோகனின் கனவை நினை வாக்க முடியும் என்று சுவாமிநாதன் பேசினார். இதில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்களின் முன்னாள் பேரவைத் தலை வர் கே.முருகன், பால மோகனனின் துணைவியார் சந்திரி, சம்மேளனத்தின் கவுரவத் தலைவர் எம்.பிரேம தாசன், காரைபிரதேச பொதுச்செய லாளர் எம்.ஷேக் அலா வுதீன், பொருளாளர் ஏ.கிறிஸ்டோபர், நிர்வாகி கள் என்.சண்முகம், எம்.சீதா ராமன், ஆர்.கீதா, வி.ஞான சேகர், பி.ஆனந்த கணபதி, பி.சிவஞானம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தோழர் பால மோக னனின் நினை வேந்தலை ஒட்டி காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய பகுதி களிலும் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றன.