districts

கொரோனா பரவல் எதிரொலி பயிற்சி மையம் மூட உத்தரவு

திருபெரும்புதூர்,ஜூன் 9- திருபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  அங்குள்ள மொத்தம் 235 மாணவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதுவரை 35 பேருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  விடுதி துணைப்பதிவாளர் விடுத்துள்ள அறிக்கையில்,  ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பு கருதி  மறு அறிவிப்பு வரும்வரை பயிற்சி நிறுவனம் மூடப்படும். விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் விடுதியை உடனே காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 13-ம் தேதி  முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்பு நடை பெறும் என்று கூறியுள்ளார்