சென்னை, ஜூலை 6 - சிட்லப்பாக்கம் குடியிருப்பு களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து புதனன்று (ஜூலை 6) தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகை யிட்டனர். சிட்லப்பாக்கம் ஏரியை சுற்றி 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சர்வே எண் 256/1ல் பெரியார் தெரு, ஆனந்தா நகர் உள்ளது. இங்கு 154 குடும்பங்கள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதி ‘அ’ பதிவேட்டில் அரசு புறம்போக்கு என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது. சர்வே எண் 256/2, 256/3, 256/4 ஆகியவற்றில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கியுள்ள வருவாய்த்துறை, 256/1ல் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க மறுப்பதோடு, ஆக்கிரமிப்பாக அறிவித்துள் ளது. இந்த பகுதிக்கு அருகே ராம கிருஷ்ணா புரத்தில் 213 வீடுகள் உள்ளன. ஏரியையொட்டி சுடு காடு, சாலை, அதன்பிறகு பள்ளி, குடியிருப்புகள் உள்ளன. அரசு நிர்வாகம், குடியிருப்பு பகுதியை மட்டும் ஆக்கிரமிப்பு என்று வகை ப்படுத்தி நோட்டீஸ் கொடுத்துள் ளது. மேலும் குடியிருப்புகளை அகற்ற வருவாய்த் துறை காவல் துறையிடம் பாதுகாப்பு கேட்டுள் ளது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை யொட்டி காவல்துறை அதிகாரி கள் சிபிஎம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடியி ருப்புகளை அகற்ற தற்போ தைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறுதி அளித்தனர். இதனால் போராட் டம் ஒத்தி வைக்கப்பட்டது.