districts

img

விழுப்புரம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

விழுப்புரம், மே 19-

   விழுப்புரம் அருகே கா குப்பம் ஏரியில் இரண்டாவது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் அருகே உள்ளது கா குப்பம். இங்குள்ள ஏரியில் பாதாள சாக்கடை சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

   ஆனால் கடந்த ஓராண்டு காலமாக இந்த சுத்திகரிப்பு நிலையம் முறையான பரா மரிப்பு இல்லாமல் செயல்பாட்டில் இல்லாத காரணத்தினால் கழிவுநீர் நேரடியாக ஏரி மற்றும் கால்வாயில் விடப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படு வதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக வும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

   இதுகுறித்து பலமுறை புகார் அளித்து, போராட்டங்கள் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மற்றும் கால்வாய் அமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபடுள்ளது.  

   அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுத்திகரிப்பு நிலையம் அருகே நடைபெற்ற பணிகளை தடுத்து நிறுத்தினர். அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏரியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கும் நட வடிக்கையை கைவிட வேண்டும் என முழக்கமிட்டனர்.