districts

புதுச்சேரியிலும் ஜூன் 14 பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி, ஜூன் 5-

     வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஜூன் 14ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

     கோடை விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் வரும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

     இந்நிலையில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று சமூக நல இயக்கங்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் திங்களன்று (ஜூன் 5) நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினவிழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.

    அப்போது பள்ளிகள் திறப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஜூன் 14இல் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், தற்போது ஒரு வாரகாலம் கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.