ராணிப்பேட்டை, செப்.7 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், செய்யாறு சாலை அருகே இளை ஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கு விக்கும் வகையில் சனிக்கிழமையன்று (செப்.7)கைப்பந்து விளையாட்டு திடல் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இரத்தினகிரி பாலமுருகன் அடிகளார் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி ச. ஞானசேகரன், மாவட்ட உடற்பயிற்சி ஆய்வாளர் செந்தில் குமார், ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், நகர மன்ற உறுப்பினர் ராஜலட்சுமிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட திமுக பொருளாளர் எ.வி. சாரதி தன் சொந்த செலவில் இந்த மைதானத்தை அமைத்து கொடுத்துள்ளார்.