districts

img

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விவசாயிகள் சங்க கோரிக்கை வெற்றி

விழுப்புரம், மார்ச் 24- விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள எய்யில் கிராமத்தில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.  இதனை  செஞ்சி பேரூ ராட்சி தலைவர் முக்தியார் அலி திறந்து வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்ரமணி யன், தவிச மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், துணை சேர்மன் விஜயலட்சுமி முரு கன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்பிரமணியன், செல்வி கார்த்திகேயன், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.முருகன், தமிழ்நாடு விவ சாய சங்க வட்ட செயலாளர் எழில்ராஜா, கிளை செய லாளர் விஷபதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலை யம் கேட்டு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் சிபி எம் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது, அதன் பயனாக கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் விவசாயி சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

;