சென்னை, ஜன. 27 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (ஜன.26) விருகம்பாக்கம் பகுதி, கே.கே.நகர் சிவலிங்க புரத்தில் இரவு பாடசாலை திறக்கப்பட்டது. சங்கத்தின் பகுதி தலைவர் அ.ஜானகிதேவி தலைமையில் நடைபெற்ற பாடசாலை திறப்பு விழா வில், தேசிய கொடியை விடுதலை சிறுத்தைகள் பகுதி செயலாளர் மணி ஏற்றினார். பாடசாலையை லயோலா கல்லூரி பேராசிரியர் ஆர். காளீஸ்வரன் திறந்து வைத்து, குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத் தின் தென்சென்னை மாவட்ட செயலாளர் தீ.சந்துரு, இந்திய மாண வர் சங்க மாவட்டத் தலை வர் ஆனந்த், வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் மணிமாறன், பொருளாளர் கார்த்தி, துணைச் செயலாளர் வினோத், சிவலிங்கபுரம் கிளை நிர்வாகிகள் பிரகாஷ் சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.