திருவண்ணாமலை, செப்.2- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பி னர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சர வணன் (கலசபாக்கம்), மாநில தடகளச் சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டது. தற்போது திறக்கப்பட்ட பாலத்தின் இதன் மூலம் 16 ஊராட்சிகள் பயனடையும். இந்த பகுதியில் ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கர் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. விளை விக்கின்ற கரும்புகளை மூங்கில்துறைப் பட்டு வழியாக சங்கராபுரம் எடுத்துச் செல்ல வும், 16 ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள், விவசாயிகள் மற்றும் பள்ளி மாண வர்களுக்கு இந்த பாலம் மிகவும் பயனுள்ள தாக அமையும் என்றும் விழாவில் பேசிய அமைச்சர் வேலு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனி வாசன், தண்டராம்பட்டு ஒன்றிய குழுத் தலைவர் பரிமளா கலையரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.