திருவள்ளூர், மே 1- தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர் யூனியன் சார்பில் திங்களன்று (மே 1), திருவள்ளூர் வீரராகவர் சுவாமி திருக் கோவில் கிளை சார்பாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கிளைத் தலைவர் தீனா தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் விக்னேஷ் வரவேற்றார். தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர் யூனியன் மாநில பொதுச் செயலாளர் முத்து சாமி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பேசினார். மாநில கொள்கை பரப்பு செய லாளர் பெரியபாளையம் இரமேஷ், மாநில துணைத் தலைவர் எஸ்.தனசேகர் ஆகி யோர் கலந்து கொண்டு நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி உள்ளிட்ட பொருட் களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் திருவள்ளூர் மாவட்ட கவுரவ தலைவர் புட்லூர் முனிரத்தினம், பொரு ளாளர் திருமழிசை சுபாஷ் அமைப்பாளர் பூந்தமல்லி பாலாஜி கோயில் கிளை நிர்வாகி கள் ஜெயவேல், லோகநாதன், ரவிக்குமாரர், குப்புராஜ், ஆளவந்தான், தயாளன், உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.