ஆன்லைன் அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும், காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும், எல்பிஜி கேஸ், சிஎன்ஜி கேஸ் பங்குகளை மாவட்டம் முழுவதும் நிறுவ வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக-25), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.கரிமுல்லா தலைமையில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ப.சுந்தரராசன், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன், சங்கர்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.