ஆட்டோ, அமைப்புசாரா கட்டுமான நல வாரியத்தில் 72 லட்சம் தொழிலாளர்களின் ஆன்லைன் தரவுகளை மீட்டெடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் நலவாரிய அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் செவ்வாயன்று (ஜன.30), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் என்.நித்தியானந்தம், ராபர்ட் எபிநேசர், கரிமுல்லா, சுமதி, சீனிவாசன், ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.