திருவள்ளூர், மார்ச் 17- கும்மிடிப்பூண்டி அருகி லுள்ள மேல்முதலம்பேடு, கீழ் காலனியில் சுரேஷ் என்ப வர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக துப்புரவு பணி செய்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இவர்களது தொகுப்பு வீடு 1994 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தாகும். நாளாக, நாளாக மழை காலத்தில் வீட்டின் மேற்கூரை ஒழுக ஆரம்பித் துள்ளது. பின்னர் மேற்கூரை தளம் சிறிது சிறிதாக பெயர்ந்து விழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வீட்டில் உறங்கி கொண்டி ருந்த போது, மேற்கூரை யின் ஒரு பகுதி பெயர்ந்து சுரேஷ் மனைவி ராதாவின் காது மீது விழுந்ததில் அவர் கேட்கும் திறன் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திலிருந்து எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் ஞாயி றன்று (மார்ச் 17), பகலில் வீட்டின் மேற்கூரை திடி ரென இடிந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத்தால் உயிர்சேதம் ஏற்படவில்லை. புதிய தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என ஏற்கெனவே ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கும் மனு கொடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. முழு வீடும் இடிந்து உயிர் சேதங்கள் ஏற்படுவ தற்கு முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து கட்டு மான சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.சி.சீனு தெரி விக்கையில், 30 ஆண்டு களுக்கு முன்பு கட்டிய தொகுப்பு வீடுகள், முறை யான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. 1994 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கட்டிய தொகுப்பு வீடுகள் கீழ்முத லம்பேடு, மேல்முதலம் பேடு, ஏ.என்.குப்பம், புதுவாயல், பெருவாயல் என ஒன்றியம் முழுவதும் அதிலும் ஆதிதிராவிடர்கள் வாழும் பகுதியில் தான் இந்த தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவை கள் இடிந்து விழும் ஆபத் தான நிலையில் உள்ளது. வீடுகள் இடிந்து உயிர் சேதங்கள் ஏற்படும் முன்பு, கணக்கெடுப்பு நடத்தி, புதிய தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதற்கு முன்னதாக தற்காலிகமாக தொகுப்பு வீடுகளை பழுது பார்க்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் வலியுறுத்தி யுள்ளார். - பெ.ரூபன்