சோளிங்கர், ஜூன் 14-
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (42). இவர் செவ்வாய்க்கிழமை(ஜூன் 13) இரவு சோளிங்கருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சோளிங்கர் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முரளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொண்ட பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.