சென்னை, டிச.21- மண்ணடி அருகே உள்ள முத்தியால் பேட்டை, மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா. இவர் பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். கடந்த 13-ந்தேதி இவரது வீட்டுக்கு வந்த மர்மகும்பல் தாங்கள் என்.ஐ.ஏ. அதி காரிகள் என்று கூறி கோவை கார் வெடிப்பு விசாரணை என்ற பெயரில் வீடு மற்றும் செல்போன் கடைகளில் சோதனை நடத்தினர். பின்னர் ரூ.2 கோடியே 30 லட்சம், 6 செல்போன், லேப்-டாப், கம்ப்யூட் டர் சி.பி.யூ. ஆகியவற்றை எடுத்துச்சென்று விட்டனர். விசாரணையில் இவர்கள் போலியானவர்கள் என்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 19-ந்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் நீதி மன்றத்தில் 6 பேர் சரண் அடைந்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர் பாக மண்ணடி அங்கப்பன் தெருவை சேர்ந்த முகமது பாசில் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.