districts

img

போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக எழும்பூரில் உள்ள கேரள சமாஜம் பள்ளியில்  போதைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் நடத்தி, மாணவர்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சதீஷ், வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் பார்த்திபன், மாநிலக்குழு உறுப்பினர் நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.