சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பாலின சமத்துவத்தை வலியுறுத்தி அயனாவரத்தில் வீதியில் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு ஆ. பிரியதர்ஷினி எம்.சி., தலைமை தாங்கினார். ஊடகவியலாளர் சோனியா, சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் பார்த்திபன், மாநில குழு உறுப்பினர் நந்தினி உள்ளிட்டோர் பேசினர்.