சென்னை, பிப். 14– இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சென்னை மண்டலம் வரும் 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் ‘ஃபேர்ப்ரோ 2023’ என்னும் பெயரில் வீடு.மனை விற்பனை கண்காட்சியை நடத்த உள்ளது. இந்த கண்காட்சி குறித்த விவரங்களையும் அது தொடர்பான விழிப்புணர்வையும் சென்னை நகர மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகவும், இந்த கண்காட்சிக்கு வீட்டு வாசலிலே பதிவு செய்வதற்கு வசதியாக அண்ணாநகர் டவர் பூங்காவில் இருந்து பேருந்து ஒன்று செவ்வாயன்று (பிப்,14) துவக்கி வைக்கப்பட்டது. கிரெடாய் சென்னை முன்னாள் தலைவர் ஹபீப் முன்னிலையில் கிரெடாய் அமைப்பின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி – கொள்கைப் பிரிவு தலைவர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். இது குறித்து கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன் கூறுகையில், கண்காட்சிக்கு வரு வதற்கு மக்கள் இந்த பேருந்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.