சென்னை, மார்ச் 14- சென்னை அரும்பாக்கத் தில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதிய வர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன பயிற்சி மையத்தின் முன்னாள் முதல் வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014ஆம் ஆண்டு மர்மக் காய்ச்சலால் உயிரிழந்தார். அவரது நினைவாக மருத்துவர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அவரது நினைவு நாள் மற்றும் பிறந்த நாளன்று ஆதரவற்ற சிறார் கள் மற்றும் முதியோர்க ளுக்கு ஆண்டுக்கு இரு முறை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மருத்துவர் சூர்யாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அரும் பாக்கத்தில் உள்ள ஆதர வற்ற 50 முதியோர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன. பின்னர் மதிய உணவும் வழங்கப்பட்டது. இதில் எல்ஐசி முன்னாள் உயரதிகாரிகள் எம்.கே. கருப்பையா, கண்ணதாசன், ஆறுமுக நயினார், எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் ஆறு முகச்சாமி, அய்யாசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.