காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசை கண் டித்து. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதனன்று (மார்ச்29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இ.ரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா, ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் வசீகரன், மதிமுக மூத்த தலைவர் வந்தியத்தேவன் ஆகியோர் பேசினர்.