திருவண்ணாமலை, மலைக்கு வடமேற்கு அடிவாரத்தில் அமைந் துள்ளது பசுமையான கிராமம். நீர் நிறைந்து நிற்கும் பகுதி என்ப தால் புனல்காடு என்று பெயரிடப்பட்ட தாக கூறப்படுகிறது. இயற்கை வளம்மிக்க இந்த பகுதியில் நெல், மணிலா, வாழை பேன்ற பயிர்க ளும், பட்டு, மல்லி, முல்லை, கண காம்பரம், சாமந்தி போன்ற பூவகை களும் சாகுபடி செய்யப்படு கிறது.
அருகிலுள்ள மூலக்குன்று மலையில் மயில், மான், முயல், காட்டுப்பன்றி, நரி, லங்கூர் இன குரங்குகள் உள்ளிட்ட விலங்கு களும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இந்த புனல்காடு, தேவனந்தல் மூல குன்று மலை அடிவாரத்தில், திரு வண்ணாமலை நகரம், அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஆகிய பகுதிகளில் சேகரமாகும் குப்பை மற்றும் பிளாஸ்ட்டிக் கழிவு களை கொட்ட வேண்டும் என்ற திட்டத்தை மாவட்ட நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.
2022 ஜனவரி 8 அன்று மூலக்குன்று மலை அடிவாரத்தில், குப்பை கொட்டுவதற்கு ஜேசிபி இயந்திம் மூலம், மரம், செடி கொடிகளை அழிப்பதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரும் ஊராட்சி மன்றத் தலைவரும் முயன்றபோது கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில், வட்டாட்சியர் தலைமையில் ஒன்று திரண்ட அரசு அலுவலர்கள் மரம், செடி, கொடி களை அழித்து சமன்படுத்த முயன்ற னர். மீண்டும் ஒன்று கூடிய கிராம மக்கள் போராட்டத் தில் ஈடுபட்ட போது 22 பேரை கைது செய்தனர்.
இதனையடுத்து, கிராம மக்க ளுடன் திருவண்ணா மலை கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குப்பை கொட்டும் தயாரிப்பு பணியை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகதில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட புனல் காடு, பாளியப்பட்டு, தேவனந்தல், ஆடையூர் கிராம மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது,பொதுமக்களின் அனு மதியின்றி குப்பை கொட்டுவதற்காக எவ்வித பணியும் நடைபெறாது என்று கோட்டாட்சியரும் உறுதி யளித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி காவல்துறை பாதுகாப்புடன் வந்த மாவட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மரம், செடி, கொடிகளை யும், கருங்கல் பாறை களையும் அழித்து நிலத்தை சமன்படுத்தனர். போராட்டம் நடத்திய கிராம மக்களை விரட்டியடித்தனர்.
புனல்காடு கிராம பகுதியில் குப்பை கிடங்கு அமைந்தால் நிலத்தடி நீர் நஞ்சாக மாறிவிடும். ஆடையூர், வேங்கிக்கால், கலர்கொட்டாய், தேவனந்தல், வேடி யப்பனூர்,பாலியப்பட்டு, மாரி யம்மன் நகர் ஆகிய ஏரிகள் பாதிக்கப்படும். இனாம் காரியந்தல், துர்க்கை நம்மியந்தல், கிளியப்பட்டு, ஏரிகளும் மாச டைந்து, துரிஞ்சலாறு, நந்தன் கால்வாய் தண்ணீரும் மாசுபடும் அபாயம் அபாயத்தை சமூக ஆர்வலர்கள் பலரும் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.
இயற்கை வளங்கள் அழிப்பு, இயற்கையை மாசாக்கும் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புனல்காடு கிராமம் காஞ்சி சாலை அருகே பந்தல் அமைத்து கிராம மக்கள் போராட்டத்தை துவக்கினர். அந்த பந்தலையும் பிரித்துப்போட்ட காவல்துறை. அத்துடன் விட்டதா? என்றால் இல்லை.
பாலியப்பட்டு, மாரியம்மன் நகர், புனல் காடு, ஆடையூர் கிரா மத்திற்குள் அதிகாலையில் புகுந்து வீடு, வீடாக குற்றவாளிகளை தேடு வதாக கூறி, பெண்களை ஆபாச மாக பேசி அராஜகத்தில் ஈடுபட்ட னர் காவல்துறையினர்.
வருவாய் மற்றும் காவல்துறை யினரின் மிரட்டல்களையும் எதிர் கொண்டு காத்திருக்கும் போராட் டத்தை துவக்கினர். தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் போராட்ம் நடத்தி வரும் அந்த மக்களின் நியாய மான கோரிக்கைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நண்பர்கள் சங்கம், வழக்கறிஞர் அமைப்பு, மக்கள் அதிகாரம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தொடர் போராட்டம் குறித்து விவ சாயி அண்ணாமலை கூறுகையில், “மலையும் வனமும் சேர்ந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுமையான மரங்களை மாவட்ட நிர்வாகமே அழித்திருப்பது வேதனையளிக்கிறது”என்றார்.
போராட்டத்தின் 17 ஆவது நாளான மே 29 திங்களன்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில், துணைத் தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லி பாபு முன்னிலையில் நூற்றுக் கணக்கான விவசாயிகள், பொது மக்களுடன் போராட்டக் களத்திலி ருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு நடைபயணமாக செல்லவுள்ளனர்.
மரங்கள் வளர்க்க வேண்டும், இயற்கையை காக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் தமிழ்நாடு அரசு, இயற்கையை அழிக்கும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பசுமையான பகுதியை பாதுகாக்க வேண்டும் என்கிற முழுக்கங்களுடன் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர்.