ராணிப்பேட்டை,செப்.19 - ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கொடைக்கல் பகுதியில் ஆவின் குளிரூட்டும் நிலை யம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவ சாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் குளிரூட்டும் நிலை யத்திற்கு கொண்டு வரப்பட்டு பாலின் தரத்தை ஆய்வு செய்த பின்பு சேகரித்து வைத்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலிலிருந்து, வெண்ணையை தனி யாக பிரித்து எடுத்து தண்ணீர் கலந்து அதன் தரத்தை உயர்த்த ஹைட்ர ஜன் பெராக்சைடு கலக்கப்படு வதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப் படையில் சென்னையைச் சேர்ந்த ஆவின் விஜி லென்ஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட குளிரூட்டும் நிலையத்தில் கடந்த செப். 14 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலப்படம் செய்வதற்காக வைத்திருந்த ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதிப்பொருளை பறிமுதல் செய்ததுடன், குளிரூட்டும் நிலையத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பால் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளார். பால் மாதிரியின் ஆய்வு முடிவில் கலப் படம் செய்யப்பட்டது உறுதியானால், சம்பந்தப் பட்டவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப் படும் என ஆவின் பால் நிறுவன மேலாளர் தெரி வித்துள்ளார்.